Home இலங்கை சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 12 போ் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 12 போ் கைது

by admin

சட்டவிரோதமாக போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

நேற்று (16) அதிகாலை வேளையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கட்டாரின் ஊடாக கனடாவுக்கு சென்று அங்கு குடியேற முற்பட்ட 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

கிரிபத்கொட, பமுனுகம, கேகாலை, மாவனெல்ல, பொல்கஹவெல, அலவத்துகொட, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 ஆண்களும் 5பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில், சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு உதவிய பெண்ணும் உள்ளடங்குவதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 6 இலட்சம் பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத பயணத்துக்கு ஏற்பாடு செய்த பெண்எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #கனடா #சட்டவிரோதமாக #போலிவிசா #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More