Home இந்தியா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்

by admin

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்றையதினம் உடல்நலக்குறைவினால் மரணம் அடைந்திருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.


 இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று 12.30 மணியளவில் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க  அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. #பாடகர் #எஸ்பிபாலசுப்பிரமணியம் #அரச மரியாதை #நல்லடக்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More