Home இலங்கை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு

அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு

by admin

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையில் இருக்கும் காவல்துறையினா் , மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்த நிலையில் சிரேஸ்ட சட்டத்தரணி என். சிறிகாந்தா காவல்துறையினருக்கு விளக்கமளித்ததன் பின்னா் அனுமதி வழங்கினா்.

சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று காலை 9 மணி முதல் இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டதனையடுத்து போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது #உணவுதவிர்ப்புப்போராட்டம் #யாழ்பல்கலைக்கழக #மாணவர்கள் #இணைவு #அடக்குமுறை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More