Home இலங்கை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து வீழ்ந்து உவர்மலை செந்தூரன் மரணம்…

கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து வீழ்ந்து உவர்மலை செந்தூரன் மரணம்…

by admin

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று (03.10.20) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது ) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

இந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது கற்பாறை அருகில் வைக்கப்பட்டிருப்பதாக காவற்துறையினர் தெரிவிப்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More