இலங்கை பிரதான செய்திகள்

20 ஆவது திருத்தமும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமும்…

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று இன்று (05.10.20) இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே காணப்படும் அதிர்ப்த்திகளும், அது குறித்து வெளியாகும் கருத்துகளும், அரசாங்கத்துள் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.