Home பிரதான செய்திகள் தடகள வீரர் ஜோசுவா உலக சாதனை

தடகள வீரர் ஜோசுவா உலக சாதனை

by admin

ஸ்பெயினின் வேலன்சியா நகரில் துரியா விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் பிரிவில் உகண்டா நாட்டை சேர்ந்த 24 வயதான தடகள வீரர் ஜோசுவா செப்டெகி உலக சாதனை படைத்துள்ளார். அவா் 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளாா்.

கடந்த 2005ம் ஆண்டு எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது.  இதனை ஜோசுவா முறியடித்து உள்ளார்.


ஜோசுவா கடந்த ஆண்டு டோஹாவில் நடைபெற்ற உலக சம்பியன்சிப் போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றிருந்தார். 

அத்துர்ன் கடந்த ஓகஸ்ட் மாதம் மொனாக்கோ நகரில் நடந்த டையமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீற்றா்ர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இவை தவிர்த்து, கடந்த டிசம்பரில் வேலன்சியா நகரில் நடந்த 10 கிலோ மீற்றா் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை அடைந்து, 6 வினாடிகள் வித்தியாசத்தில் 10 ஆண்டு கால சாதனையை முறியடித்திருக்கிறார்.


இதே வேளை மகளிர் பிரிவு 5 ஆயிரம் மீற்றர் தடகள போட்டியில் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனையான 22வயதான லெடிசென்பெட் கிடி பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.


இதற்கு முன்பு, அவர 2008ஆம் ஆண்டு நாட்டை சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனையான திருனேஷ் திபாபா ஓஸ்லோவில் நடந்த போட்டியில் 14 நிமிடங்கள் 11.15 வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்திருந்தது உலக சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது #தடகளவீரர் #ஜோசுவா #உகண்டா #லெடிசென்பெட்கிடி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More