Home இலங்கை கிளிநொச்சியில் நான்கு ஆவாக்கள் கைது!

கிளிநொச்சியில் நான்கு ஆவாக்கள் கைது!

by admin

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயற்சித்த ஆவா குழுவினர் நேற்று முன்தினம் (07.10.20) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று (08.10.20) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் குடும்பஸ்தர்கள் சிலரை தாக்குவதற்கு திட்டமிட்டு சென்ற நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்படாதிருந்தால் திட்டமிட்டபடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும், குறித்த தாக்குதல் முயற்சி கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், மெலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More