Home இலங்கை கிம்புல எலே குணாவின் உதவியாளர் கைது – சிறைக்காவலர் தடுத்து வைப்பு!

கிம்புல எலே குணாவின் உதவியாளர் கைது – சிறைக்காவலர் தடுத்து வைப்பு!

by admin

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த ´கிம்புல எலே குணா´ என்பவரின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 4 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

ஹெரோயினுடன் கைதான சிறைக்காவலர் தடுத்து வைப்பு!

புத்தளத்தில் ஹெரோயினுடன் கைதான சிறைச்சாலைக் காவலரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு புத்தளம் மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆர்.எஸ்.மௌபியா நேற்று (19.10.20) உத்தரவிட்டுள்ளார்.

களுத்துரை சிறைச்சாலையில் பணிபுரியும் கொச்சிக்கடையைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

புத்தளம் காவற்துறை போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் நேற்று (19.10.20) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 40 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரான களுத்துறை சிறைச்சாலையில் கடமைபுரியும் சிறைக்காவலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறைனர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சிறைக்காவலரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More