Home இலங்கை டயானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

டயானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

by admin

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்த நிலையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் என்றும் தெரிவித்தார்.

‘குடும்ப ஆட்சிக்கும் அமெரிக்க குடிமகனைக் கொண்டுவருவதற்குமான மசோதாவாகவே நாங்கள் இதனைப் பார்க்கிறோம். மகாநாயக்க தேரர்கள் இதனை எதிர்த்த போதும் பௌத்த அரசாங்கம், முஸ்லிகம்களை இணைத்துக்கொண்டு 20ஐ நிறைவேற்றியுள்ளது.

‘நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் எமது பக்கம் இருந்தபோதும் ஏனையவர்கள் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

‘நாட்டில் சிறுபான்மையினர் வேண்டாம் எனக் கூறி சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைத்தவர்கள், மகாநாயக்கத் தேரர்களின் எதிர்ப்பையும் மீறி சிறுபான்மையினரை இணைத்துக்கொண்டு 20ஐ நிறைவேற்றியுள்ளனர்.

’20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்துள்ளார். இது எமது கட்சியின் தீர்மானத்துக்கு எதிரானது. அத்துடன் எமது கட்சிக்கு வாக்களித்த 28 இலட்சம் பேரையும் அவமதித்ததுக்குச் சமனாகும்.

‘இந்த நாடாளுமன்ற உறுப்பினரை பெண்களின் பிரதிநிதியாகவே நாங்கள் பார்க்கிறோம். அவர் 20க்கு ஆதரவாக வாக்களித்தனூடாக நூறாயிரம் பெண்களை அவமதித்துள்ளார். எனவே, கட்சியின் உயர்மட்டத்துடன் கலந்துரையாடி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஒரு சதம்கூடபெறவில்லை

20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக அரசாங்கத்திடமிருந்து எதனையும் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயான கமகே தெரிவித்துள்ளார்.

சிலர் நான் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்,ஆனால் நாங்கள் ஒரு சதம் கூட அரசாங்கத்திடமிருந்து பெறவில்லை,வலுவான ஜனாதிபதியே நாட்டிற்கு அவசியம் என்பதாலேயே நான் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.


பெருமளவு பணத்தை செலவழித்து ஜனாதிபதியை தெரிவு செய்த பின்னர் அவரது கைகளை கட்டி ஏன் கடலில் வீசவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியிலேயே நீடிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More