
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட, பத்தரமுல்ல, கொலொன்னாவ, கஹத்துடுவ, மொரட்டுவ, கடுவலை ஆகிய 07 பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில், ராகம, வத்தளை, திவுலப்பிட்டிய, ஜாஎல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனகல்ல, வெயாங்கொட மற்றும் கட்டுநாயக்க ஆகிய 19 பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசங்களும் இவ்வாறு கொரோனா வைரஸ் அதிகம் பரவிவரும் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. #கொழும்பு #கம்பஹா #களுத்துறை #அதிஅபாயவலயங்கள் #கொரோனா
Spread the love
Add Comment