Home இந்தியா தமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…

தமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…

by admin

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நவம்பர் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

எனினும், பாடசாலைகள் (9ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை), உயர் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், ஆகியவை நவம்பர் 16 முதல் திறக்கப்படும்.

தமிழகத்தில் எதிர் வரும் 10 ஆம் திகதி முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு உட்பட்ட வகையில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்களை 10ம் திகதி முதல் திறந்து கொள்ளலாம்.

நவம்பர் 2ஆம் திகதி முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More