Home இலங்கை ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி மக்களின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தமுடியாது

ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி மக்களின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தமுடியாது

by admin

ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி மக்களின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தமுடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொிவித்துள்ளாா்.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட  “பாதுகாப்பாக இருங்கள்” எனும் டிஜிட்டல் செயற்றிட்டத்தினை நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்து வைத்ததன் பின்னர், அங்கு கருத்துரைத்த போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸை அடக்குவதற்கான தீர்வொன்று கிடைக்கும் வரையில் நாட்டை முழுமையாக முடக்க முடியாது என திட்டவட்டமாக தொிவித்த ஜனாதிபதி சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, சகலரும் தங்களுடைய அன்றாட கடமைகளை சாதாரணமாக முன்னெடுப்பதற்கு தயாராகவே இருக்கவேண்டும் எனவும் தொிவித்துள்ளாா்.

மேலும் மக்களின் வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம் ஏனைய ​துறைகள் தொடர்பில் சமாந்தரமாக கவனத்தில் எடுத்து தீர்மானங்களை எடுக்க​வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

அத்துடன் , வைரஸ் பரவாமல் இருப்பதற்காகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காகவும் பரவாமல் இருப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்தும் அதன் தற்போதைய நிலைமை குறித்தும் கொவிட்- 19 செயலணி ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது #ஊரடங்கு #நடமாட்டம் #கோட்டாபய #கொரோனா #சுகாதார

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More