Home இலங்கை இலங்கையில் 13,929 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்…

இலங்கையில் 13,929 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்…

by admin

இலங்கையில் இதுவரையில் 13,929 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 510 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்தத் தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,451 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 1,041 பேர் ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் 1,007 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என்பதுடன் ஏனைய 8,403 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் 8,285பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 5,609 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More