Home இலங்கை மண்டைதீவில் கடற்படைக்கு காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்..

மண்டைதீவில் கடற்படைக்கு காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்..

by admin

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி, அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவுச் சந்தியில் கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நோக்கில் நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, காணி உரிமையாளர், அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்றிருந்தனர்.

அத்துடன், காணி அளவீடு செய்யும் இடத்திற்கு முன்பாக இவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், சிறிபத்மராசா உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More