Home உலகம் பிரித்தானியாவில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு

பிரித்தானியாவில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு

by admin

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கியிருப்பதால், நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இதுவரையில்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பும் 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஏற்கனவே பிரித்தானிய அரசு டிசம்பர் 2-ம் திகதிவரை முடக்கநிலையை பிறப்பித்துள்ள போதும் உயிரிழப்பு அதிகரித்தைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.


நேற்று வியாழக்கிழமை மட்டும் பிரித்தானியாவில் புதிதாக 33 ஆயிரத்து 470 பேர் கொரோனாத்தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் புதன்கிழமையன்று 10,520 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

பிரித்தானியாவில் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமாா் 13 லட்சத்தை எட்டியுள்ளதுடன் உயிரிழப்பு 50 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 563 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை 595 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே மாதத்துக்குப் பின்னா் அதிகபட்ச உயிரிழப்பை புதன்கிழமை பிாித்ானியா சந்தித்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவில் 50 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளில் 5-வது இடத்தை பிரித்தானியா பிடித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

கடந்த 7 நாட்களில் கொரோனா பரிசோதனை சராசரி என்பது 22,668 பேருக்கும் கீழாகவே உள்ளது. இந்தப் பரிசோதனை அளவுகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனா பாதிப்பைக் குறைக்க முடியும் என பிரித்தானிய தேசிய சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவப் பேராசிரியர் ஸ்டீபன் போவிஸ் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இங்கிலாந்தில் டிசம்பர் 2-ம் திகதிவரை பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளுடன் முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை வேல்ஸ் , வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியவற்றில் 17 நாட்கள் முடக்கநிலை தனியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் டென்மார்க்கிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளுக்கு 2 வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இருக்கும் பிரித்தானிய மக்கள் மட்டுமே வர வேண்டும் எனவும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், லாவோஸ், ஐஸ்லாந்து, கம்போடியா, சிலி, பஹ்ரைன் ஆகிய நாடுகள் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் பிாித்தானியஅரசு தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #பிரித்தானியா #கொரோனா #உயிரிழப்பு #corona #uk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More