Home இலங்கை சடலத்தை எடுத்து வந்தவர்கள் தனிமைப்படுத்தலில்

சடலத்தை எடுத்து வந்தவர்கள் தனிமைப்படுத்தலில்

by admin

கொழும்பில் உயிரிழந்தவரின் சடலத்தை காரைநகருக்கு எடுத்து வந்த ஐவர் குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
காரைநகரை சேர்ந்த நபர் கொழும்பு – 13 வசித்துவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் சடலத்தினை அவரது குடும்பத்தினர் ஐவர் , காரைநகரில் இறுதி சடங்கு செய்து உடலை தகனம் செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் கொழும்பில் இருந்து காரைநகருக்கு எடுத்து வந்திருந்தனர். 


அந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்த விதிமுறைகளை மீறினார்கள் என சடலத்தை எடுத்து வந்தவர்களை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தியுள்ளார். 
அதேவேளை இறந்தவரின் உடல் கோம்பயன் மயானத்தில் உள்ள  மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது #தனிமைப்படுத்தல் #காரைநகர் #மாரடைப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More