Home இலங்கை இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனாவால் மரணம் – 544 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகினர்.

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனாவால் மரணம் – 544 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகினர்.

by admin

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தோர் அனைவரும் ஆண்களாவர்.

39, 54, 79 88, வயதுகளையுடையவர்ளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

544 புதிய கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் மேலும் 544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,628 ஆக அதிகரித்துள்ளது. #கொரோனாதொற்று #இலங்கை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More