Home இலங்கை மருத்துவ பீட மாணவன் இளங்குன்றன் சடலமாக மீட்பு…

மருத்துவ பீட மாணவன் இளங்குன்றன் சடலமாக மீட்பு…

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் எனும் மாணவனே சடலமாக மீட்க்கபட்டுள்ளார்.

குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளார்.

இந் நிலையில் குறித்த மாணவன் இன்றையதினம் வகுப்புகளுக்கு சமூகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக அழைப்புகளை மேற்கொண்ட போதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த போது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் —

#மருத்துவபீடமாணவன் #இளங்குன்றன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More