Home இலங்கை கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தால் வலைகள் எரிந்து நாசம்

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தால் வலைகள் எரிந்து நாசம்

by admin

கடலில் மிதந்து வந்த கொள்கலனில் இருந்த திரவத்தை படகினுள் ஊற்றியமையால் , படகும் , படகிலிருந்த வலைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. 


யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இருந்து நேற்றைய தினம் இரு மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர். 


அதன் போது கடலில் கொள்கலன் (பிளாஸ்ரிக் கான்) ஒன்று மிதந்து வந்துள்ளது. அதனை மீனவர்கள் இருவரும் எடுத்து , திறந்து பார்த்த போது , அதனுள் திரவம் காணப்பட்டுள்ளது. அதனை அவர்கள் படகினுள் ஊற்றியுள்ளார்கள். உடனே படகும் , படகில் இருந்த வலைகளும் தீப்பற்றி எரிய தொடங்கின. விரைந்து செயற்பட்ட மீனவர்கள் இருவரும் கடலினுள் குதித்து , கடல் நீரினால் தீயை அணைக்க முற்பட்டு , போராட்டத்தின் மத்தியில் தீயை அணைத்தனர். 


இருந்த போதிலும் , படகினுள் இருந்த சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. படகும் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது #மர்மதிரவம் #வலைகள் #படகு #வடமராட்சி #மீனவர்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More