இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண உணவகங்களில் நாளை முதல் உணவு உட்கொள்ள கட்டுப்பாட்டுடன் அனுமதி

வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில நாளை (நவ.21) சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீதமானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்

ஒக்டோபர் 4ஆம் திகதி மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றில் ஏற்பட்ட கொரோனா தொற்று கொத்தணியை அடுத்து கடந்த மாதம் முதல் வடக்கு மாகாணத்தில் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் உணவகங்களில் உணவுப் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமார் ஒரு மாதங்களின் பின் அந்தத் தடை நீக்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை (நவ.21) சனிக்கிழமை முதல் உணவகங்களில் இருந்து உணவு உட்கொள்வதற்கு இருக்கைகளின் எண்ணிக்கையில் (இடவசதியில்) 50 சதவீதமானவர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் #வடமாகாண #உணவகங்கள் #அனுமதி #கேதீஸ்வரன் #மினுவாங்கொட #பேலியகொட

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.