Home இலங்கை ஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு

ஓடக்கரையில் 100 குடும்பங்கள் பாதிப்பு

by admin

வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , சுமார் 20க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். 
பருத்தித்துறை ஓடக்கரை ஜே/402 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 100 குடும்பங்கள் மழையினால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 


அதில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி , உறவினர் வீடுகள்,  பொதுமண்டபங்கள் , பொது இடங்களில் தங்கியுள்ளனர். 


அதேவேளை அப்பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் வியாழக்கிழமை  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் , மற்றும் அக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்ட குழுவினர் சமைத்த உணவுகளை வழங்கினர். அத்துடன் அவர்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து மேலதிக உதவிகளை வழங்குவதாவும் உறுதி அளித்துள்ளனர். #ஓடக்கரை #பாதிப்பு #வடமராட்சி #பருத்தித்துறை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More