Home இலங்கை பாதுகாப்பு -தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன

பாதுகாப்பு -தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன

by admin

நவம்பர் 20 ம் திகதி அமைச்சு விடயத்துறைகளில் ஏற்படுத்தப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தொிவித்துள்ளது

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபபக்ஸவும் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அரச பொறிமுறையையும் சந்தை செயற்பாடுகளையும் எளிமைப்படுத்துவது,  அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவாக்குவது புதிய அமைச்சின் முன்னுரிமையாகும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இலத்திரனியல் கட்டண முறைகளை நிறுவுதல், நாடு தழுவிய அதிவேக தரவு பரிமாற்ற முறைமை மற்றும் அதனுடன் தொடர்புடைய செல்லிட வலையமைப்பு முறைமையை நிறுவுதல் ஆகியவை புதிய அமைச்சின் விடயத்துறைக்குள் உள்ளடங்கும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #பாதுகாப்பு #தொழில்நுட்பஅமைச்சு #ஜனாதிபதி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More