Home இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையானவர் – சுற்றி உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையானவர் – சுற்றி உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர்.

by admin

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளது. அலரிமாளிகை முடக்கப்படவில்லை என பிரதமரின் ஊடக செயலாளார் தெரிவித்துள்ளமை பொய். நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாது என பசில் ராஜபக்ச சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடக செயலாளர் சொன்னது முற்றிலும் பொய் என கடும் அதிர்ப்தி வெளியிட்டுள்ளதுடன், அலரிமாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது, பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்கப்பட்டுள்ளனர், என்னால் அங்குள்ள அலுவலகங்களை பயன்படுத்த முடியவில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பிரதமரின் ஊடக செயலாளருக்கு தான் என்ன செய்கின்றேன் என்பது தெரியாது உண்மைக்கு மாறான விடயங்களை தெரிவிப்பதன் மூலம் பிரதமரின் பெயருக்கு களங்கத்தையும் அவருக்கு தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்துகின்றனர் என பசில் ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.

தன்னை பற்றி அவர்கள் தெரிவித்ததும் பிழையான விடயங்கள் என அவர் குறிப்பிட்டுள்ள அவர் அது நடந்திருக்க கூடாது அவர்களிற்கு அதற்கான அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் எதனையும் மறைக்கவிரும்புபவரில்லை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையானவர் முகத்துக்கு நேரே பேசுபவர் எனவும், நாங்கள் வெளிப்படையானவர்களாக மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்காதவர்களாகயிருக்கவேண்டும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை மறைப்பதால் என்ன பயன்? பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட முடக்கலின் பின்னர் அலரிமாளிகைக்கு செல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#அலரிமாளிகை #மகிந்தராஜபக்ச #பசில்ராஜபக்ச

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More