Home இலங்கை இணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி

இணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி

by admin

இன்று (29) மாலை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 04 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் , குறித்த சம்பவம் காரணமாக காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…

Nov29-12.39PM

மஹர சிறைச்சாலைக்குள் இருந்து கைதிகள் சிலர் தப்பிச்செல்ல முயற்சித்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இதன்போது, சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார்.

மஹர சிறைச்சாலை வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #மஹரசிறைச்சாலை #துப்பாக்கிச்சூடு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More