Home இலங்கை கே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு.

கே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு.

by admin

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என தெரிவித்த காவற்துறையினர், மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த 19வயதுடைய சிவச்சந்திரன் நிரோஜன், 19வயதுடைய மாசிலாமணி தவச்செல்வம் என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர் இன்று மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காங்கேசன்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More