Home இலங்கை வெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு..

வெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு..

by admin

தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் கொடிகாமம் காவற்துறையினர் வீதியால் சென்ற போது நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட காவற்துறையினர் அண்மையிலுள்ள மிருசுவில் நாவலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய மாகாலிங்கம் மகேஷ் என்வரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புரெவி புயல் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் பெய்த கடும் மழையினால் வீதிகள், உள் ஒழுங்கைகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுகிறது இந்நிலையிலேயே இந்நபரும் நீருக்குள் தவறுதலாக வீழ்ந்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

#புரெவிபுயல் #தென்மராட்சி #கொடிகாமம் #சடலமாகமீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More