Home இலங்கை “சுதந்திரத்திற்குப் பின் நம்மிடம் இருப்பது தாய்மார்களின் கண்ணீர் கடல் மட்டுமே.”

“சுதந்திரத்திற்குப் பின் நம்மிடம் இருப்பது தாய்மார்களின் கண்ணீர் கடல் மட்டுமே.”

by admin

முதல் பதிவேற்றம் – December 6, 2020 4:22 pm

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற வாசகம் அப்படியே சொற்களோடு மட்டும் நின்றுவிடாது, நாட்டை நேசிக்கும் உண்மையான ஒரு தேசபக்தன் அதை எவ்வாறு யதார்த்தமாக்குவது என்று உடனடியாக சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பதினொரு கைதிகள் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்த மகர சிறைச்சாலையில் நடந்த சோகம் குறித்து இன்று (டிசம்பர் 06) சமூக வலைத்தளமான trupatriotlk இல் ‘உண்மையான தேசபக்தன்’ என்ற பெயரில் கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டபோது இவ்வாறு கூறியுள்ளார்.

“பிக்பொக்கட் காரர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், பிற குற்றவாளிகள், பயங்கரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என அனைவருக்கும் சட்டத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் இது நாகரிக நாட்டின் கொள்கையாகும் என்று மங்கள தெரிவித்துள்ளார்.”

மங்கள சமரவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்…

“அண்மையில் மகர சிறைக் கைதிகள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க தங்களை PCR பரிசோதனை செய்யவேண்டும் என கோரிய போது, அந்தக் கைதிகள் குழுவாக கொல்லப்படுவதை நாங்கள் கண்டோம். அந்த நேரத்தில் சிறைக்கு முன்னால், தங்களின் பிள்ளைகளின் உயிருக்காக அழுத தாய்மார்களின் கண்ணீரைப் பார்த்தேன்.”


“32 ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசியலில் இருந்த போது எனக்கு நினைவிருக்கிறது, தெற்கில் . காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பிள்ளைகளுக்காக அந்த தாய்மார்கள் கண்ணீர் சிந்தினார்கள். அப்போது வடக்கில் உள்ள தாய்மார்களின் கண்ணீரையும் பார்த்தோம்.”

“இந்த நாட்டில் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் மட்டுமல்ல
பிதேச பயங்கரவாதத்தின் இலக்குகளாக மாறிய பிள்ளைகளின் உறவினர்களின் கண்ணீரையும் நாங்கள் கண்டோம்.”


“நாங்கள் எங்கள் சொந்த நாட்டின் பிள்ளைளை கொன்று இறக்கிறோம். அப்போது தெற்கில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் வடக்கில் தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மகர சிறையில் அண்மையில் கொல்லப்பட்ட இளைஞர்கள் 2012 இல் வெலிக்கட சிறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் நம் நாட்டில் எங்கள் சொந்த குழந்தைகளை நாமே கொன்றோம்.”

“இந்த அர்த்தத்தில், சுதந்திரத்திற்குப் பின் நம்மிடம் இருப்பது
தாய்மார்களின் கண்ணீர் கடல் மட்டுமே. நம் தாய்மார்களின் கண்ணீரை எப்படி நிறுத்துவது. இப்போது நாம் நமது மனச்சாட்சியைக் கேட்க வேண்டும். எங்ளைது சொந்த பிள்ளைகளின் வாழ்க்கை தீவிரவாதத்தை நோக்கி தள்ளப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.”


“ஏன் நமது பிள்ளைகள் போதைப்பொருள் பிரபுக்களுக்கு இரையாகிறார்கள் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளாக நம் பிள்ளைகள் மாறுவதற்கு நாமே பொறுப்பு. ஒரு நாடாக நாம் தீர்மானம் எடுக்க வேண்டும்.”

“அது மட்டுமல்லாமல், அவர்கள் ஒரு பிக்பாக்கெட்காரர்களாக ஆகலாம், ஒரு அடிமையாக கூட இருக்லாம், ஒரு குற்றவாளியாக இருக்கலாம், ஒரு பயங்கரவாதியாகவோ அல்லது தீவிரவாதியாகவோ இருக்கலாம், அவர்கள் அனைவருக்கும் சட்டத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
அதுவே ஒரு நாகரிக நாட்டின் கொள்கை.”

‘முற்போக்கு மகளிர் சங்கத்தின்’ வழக்கறிஞர் நிருபா செரசிங்க, தாய்மார்களின் கைதிகள் உட்பட உறவினர்கள் மஹாரா சிறைச்சாலைக்கு மோதலுக்குப் பிறகு துக்கம் அனுசரிக்க எப்படி வந்தார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். “

“இந்த நாட்டின் அரசியல்வாதிகளே இந்த நாட்டு மக்களை இதுபோன்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்” என வழக்கறிஞர் நிருப செரசிங்க கூறினார்.

நிலைமை குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையர் ரமணி முத்தெட்டுவேகம “யார் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று குடும்பங்களுக்குத் தெரியாது? யார் இறந்தார்கள்? என்பதும் குடும்பங்களுக்கு தெரியாது அது குறித்த தகவலும் இல்லை என” பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.

#ஒரேநாடுஒரேசட்டம் #தாய்மார்களின்கண்ணீர் #மங்களசமரவீர

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More