Home இலங்கை பிரசாந்தனின் சிறையடைப்பு நீடிப்பு!

பிரசாந்தனின் சிறையடைப்பு நீடிப்பு!

by admin


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் இன்று உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா தொற்று நிலைமை காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள் ள் பூ.விரசாந்தன் மீதான வழக்கு இன்று இணையவழியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய கடந்த மாதம் 23 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

#பிரசாந்தன் #தமிழ்மக்கள்விடுதலைப்புலிகள் #கொரோனாதொற்று #இரட்டைக்கொலை #ஆரையம்பதி #சட்டமாஅதிபர்திணைக்களம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More