
மல்லாகம் நீதிமன்ற நியாயாத்திக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இன்று (டிசெ.14) திங்கட்கிழமை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி சோ.தேவராஜா மற்றும் செயலாளர், சட்டத்தரணி க.சுகாஷ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகள் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பருவகால விடுமுறைக்காக இடைநிறுத்தப்படவுள்ள
நிலையில் 4 நாள்கள் முன்னதாக சட்டத்தரணிகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. #மல்லாகம்நீதிமன்ற #சட்டத்தரணிகள் #ஒதுங்க #கொரோனா
Spread the love
Add Comment