Home இலங்கை மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 90ஆக உயர்வு

மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 90ஆக உயர்வு

by admin

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை நேற்று ஞாயிறுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரத் தொடர்புடைய 2 பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனும் 40 வயதுடைய ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் நேற்று 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 118 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். #மருதனார்மடம் #கொத்தணி #உயர்வு #சந்தை #கொரோனா #யாழ்ப்பாணம்_பல்கலைக்கழக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More