Home இலங்கை வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் – ஒருவர் கைது

வலி.வடக்கு தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் – ஒருவர் கைது

by admin

வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இளவாலை காவல்துறையினரால் ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் வழி மறித்து தாக்குதலை மேற்கொண்டதுடன் சாரதியையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர். 
இச் சம்பவம்  நேற்றைய தினம் இரவு இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் வெள்ளநீர் வடிந்தோடு வாய்க்காலை வெட்டும் நடவடிக்கையை கண்காணித்துவிட்டு திரும்பிய வேளையிலேயே தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பில் தவிசாளரினால் இளவாலை  காவல் நிலையத்தில்  செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் ,  இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை  காவல்துறையினா் , காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #வலி_வடக்கு #இளவாலை #தவிசாளா் #வாகனம் #தாக்குதல் #கைது #சுகிர்தன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More