Home இலங்கை பிறிதொருவரின் கடவுச்சீட்டின் மூலம் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி கைது…

பிறிதொருவரின் கடவுச்சீட்டின் மூலம் கனடா செல்ல முயன்ற யாழ் யுவதி கைது…

by admin

போலியான கடவுச் சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 22 வயது யுவதியொருவர் போலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சமர்ப்பித்த கனேடிய கடவுச் சீட்டு தொடர்பில் சந்தேகித்த எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகளினால் குறித்த கடவுச்சீட்டு மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட தொழிநுட்ப பரிசோதனையில் அவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு வேறொருவருக்கு உரியது எனவும் மற்றும் குறித்த கடவுச்சீட்டில் யுவதியின் புகைப்படும் பயன்படுத்தப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டில் பயன்படுத்தப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முத்திரை, போலியாக தயாரிக்கப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த யுவதி குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

#கடவுச்சீட்டு #கனடா #இளைஞன்_கைது #எமிரேட்ஸ்_விமான_சேவை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More