Home உலகம் கொரோனாவின் மரபணு திரிபும், அதனால் ஏற்படும் அந்த 7 அறிகுறிகளும்!

கொரோனாவின் மரபணு திரிபும், அதனால் ஏற்படும் அந்த 7 அறிகுறிகளும்!

by admin


கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றி உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், அண்மையில் இங்கிலாந்தின் சில பகுதிகளில் கொரோனாவின் மரபணு திரிபு புதிய வகையான கொரோனா பரவுகையை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.


உருமாற்றம் பெற்ற இந்த கொரோனா வைரஸின் அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா பரவ ஆரம்பித்ததும், அது குறித்த அவதானிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.


இதுவரை கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல கட்ட சோதனைகளைக் கடந்து மனித சோதனைகளில் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பரவி வருவது மக்களின் நம்பிக்கையில் தளர்வுகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.


கொரோனா வைரஸ் மாற்றம் பொதுவாக ஒரு வைரஸ் அதன் கூறுகளில் மாற்றம் பெற்று உருமாற்றம் அடைவது என்பது சாதாரணமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 17 முறை தனது மரபியல் கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இங்கிலாந்தில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வீரியமிக்கதுடன், ஏற்கனவே இருக்கும் கொரோவை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியதாக முதல் கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. “VUI 202012/01” என பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், தனது “ஸ்பைக்” புரதத்தில் ஒரு மரபணு மாற்றத்தை கொண்டுள்ளது. இது தான் மக்கள் மத்தியில் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


கொரோனாவின் மூன்று பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு தவிர, பின்வரும் ஏனைய 7 அறிகுறிகளும் கொரோனா வைரஸின் புதிய திரிபுடன் தொடர்புடையவையாக உள்ளன.

சோர்வு
பசியின்மை
தலை வலி
வயிற்றுப்போக்கு
மனகுழப்பம்
தசை வலி
சரும அரிப்பு அல்லது வெடிப்பு
கிங் கல்லூரி ஆய்ளர்களின் கூற்றுப்படி,

” மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் எவருக்காவது தென்பட்டால், கவனமின்றி இருக்காமல், அந்த அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்வதோடு, விரைவில் பரிசோனையையும் செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

இதுவரையிலும் இந்தப் புதிய வகை கொரோனாவை கண்காணித்தவரை, புதிய கோவிட் திரிபு முந்தைய வைரஸ் பரவுதலை விடவும் 70 சதவீதம் அதிக தொற்றுநோயாக இருப்பதால், இது மிகவும் ஆபத்தானதாக அதிகாரிகள் நம்புகின்றனர். மேலும் பழைய கொரோனாவை காட்டிலும் புதிய கொரோனா ஒருவரை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதோடு புதிய கொரோனா வைரஸ் முந்தைய விகாரங்களை விட மிகவும் வேகமாகவும், கடுமையாகவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இந்த நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 அடுக்கு முடக்கத்தை பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில், ஏனைய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கு அந் நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. எனினும் பிரித்தானியா தவிர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் இந்தப் புதிய வகைக் கொரானாவின் அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், தனிப்பட்ட ஒருவர் தொற்றின் அறிகுறிகள் லேசாக தென்பட்டாலும், தங்களைத் தாங்களே தனிப்படுத்திக் கொள்வதால், மற்றயவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். அத்துடன் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அரசாங்கங்கள் பரிந்துரைத்த வழிக்காட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அனைத்து நேரங்களிலும் பின்பற்றுவதன் மூலம் ஒவ்வாருவரும் தம்மை தற்காத்தக் கொள்ள முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More