Home இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

by admin

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இன்று திங்கட்கிழமை காலை நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீனமுன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன் போது கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொள்ளாதே, விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியாக அரசு பாகுபாடு காட்டாதே உள்ளிட்ட பல்வேறு கோசங்களை   போராட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #அரசியல்கைதிகளின் #விடுதலை #கவனயீர்ப்பு_போராட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More