Home இலக்கியம் திரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்! பேராசிரியர் சி. மௌனகுரு!

திரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்! பேராசிரியர் சி. மௌனகுரு!

by admin

ரம்மியா  ஹம்சிகா   எனும் இரு  இளம்   ஊடகவியாலாளினிகள்   கிளிநொச்சியிலிருந்து     என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில்  தொடர்பு கொண்டனர்.    ஓர்  அழைப்பும்  விடுத்தனர்

 “நாங்கள்  சிலர் இணைந்து  பாலுமகேந்திரா  பெயரில்  ஓர்  நூல் நிலையமும்     பயிற்சிக்  கூடமும்  ஆரம்பிக்கிறோம்.  27.12.2020 இல் அதன் ஆரம்ப  விழா  நடைபெறவுள்ளது  அதில் ஓர் சிறப்பு விருந்தினராக   நீங்கள்  கலந்து கொள்ளவேண்டும்.  அதில்   பாலுமகேந்திராவுடனான  உங்கள்  அனுபவங்களை பகிர்ந்து  கொள்ளவேண்டும்”

சரி  என ஒப்புக்கொண்டேன்

பாலு மகேந்திரா  என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும்  300  அல்லது 400  யார் தூரம்தான் இடைவெளி,  அவர் என்னை விட 4 வயது  மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் அண்ணன்  எனவே  அழைப்போம்.

 எனது  10  வயதிலிருந்து   15  வருடங்கள்  தொடர்ச்சியாக  அவருடனான  நெருக்க  உறவு  இருந்தது

அவர் தந்தையார்  பாலநாதன்  புகழ் பெற்ற  கணித  ஆசிரியர்  தந்தையின்  பெயரைத் தன்னுடன் இணைத்து  பாலு  மகேந்திரா  என்பெயர்  வைத்துகொண்டார்  மகேந்திரன்.பின்னாளில் இந்த  பாலுமகேந்திரா  எனும் பெயரே  நிலைத்து விட்டது அவரது  உறவினர்கள்  இன்றும் என் அருகில் வசிக்கிறார்கள்

மகேந்திரன்  அண்ணா  என்றே  சிறு  வயதில்  அவரை  நான்  அழைப்பேன்

அடிக்கடி  மகேந்திர  அண்ணர் வீடு செல்வேன்n அனைத்தையும்  அறிந்துகொள்ள வேண்டும் என்ற  ஆர்வம் மிக்க  வயது அது  அவர்   தனது தோற்றத்தாலும்,  பேச்சாலும்,  செயற்பாடுகளாலும்  எம்மை மிகவும் கவர்ந்தார்.

 தரமான   கலை   இலக்கிய ஈடுபாடு  கொண்டவர் அவர். அவர்  சிந்தனைகள்  எம்மீதும்  தாக்கம்  செலுத்தினஅவரோடு  உரையாடிய  நாட்கள், அவரது  கலைத்  துறை  ஆசைகள் அவரது கலைப் பெரு வெறி    கலைத்துறையில்  சாதிக்க வேண்டும் என்ற   அவரது அதீத வெறிக் குணம் எமது சிறு  வயதில்    அந்த வெறியினை  எமக்கும் ஊட்டியமை

 அவர்  இளவயது  மனப்போக்கு

அவரது  குசும்புத்தனம்,  

 அவரது ஊர் அனுபவங்கள்

அனைத்தையும்சிறுவனாகவும்  வாலிபனாகவும்அருகிலிருந்து  பார்த்த  அந்த ஞாபகங்கள் வந்தன

 இளசுகள்  ஆகிய  இந்த  இளம்  தலை முறையினர்  ஆர்வம் காரணமாக  ஒரு சிறு  வீட்டில்  ஓர் நூல் நிலையம்  ஆரம்பிக்கிறார்கள்    என   எண்ணிய  ஒப்புதல்  தந்த  எனக்கு

 அக்கலையகம்  பற்றி  அதன் தலைவர்  ரம்மியா  காட்சிகளுடன்  நடத்திய  அழகான அறிமுக   உரையும்

அதனூடாக  வெளிப்பட்ட அக்கலையகத்தின்  அமைப்பும்

 அங்கிருக்கும்  நூல்கள்  வீடிஓக்கள் பற்றிய தகவல்களும் 

பெரு வியப்பையும்  மகிழ்ச்சியையும்  நம்பிக்கையையும்  அளித்தன

   27.12  2020  இந்நூலகத்   திறப்பு  விழா  நடந்தேறியது

பலர் இணைய மூலம்  இணைந்து கொண்டனர்

உலகப்பிரசித்தி பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனராகிய மஜீத் மஜீதி அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்

 கனடா,  ஐக்கியராச்சியம்,   இந்தியா,  இலங்கை   இருந்து பலர்  சிறப்பு  விருந்தினர்களாகக் கலந்து  கொண்டனர்

அந்நூல் நிலையத்தில்  10 000  க்கு மேற்பட்ட   திரைப்பட  இறுவட்டுகளும்

 பாலேந்திரா  சேகரிப்பில்  இருந்து  அவர்கள்  குடும்பத்தினர்  கொடுத்த  2000  இறு வட்டுகளுமாக 

மொத்தம்  12000  க்கு மேற்பட்ட  இறுவட்டுகள்  இருக்கின்றன என அறிகிறேன்

அத்தோடு பாலுமகேந்திரா   குடும்பம் அளித்த  அவர் வீட்டில்  இருந்த    750 சினிமா  சம்பந்தமான  நூல்களும்

  ஈழத்து எழுத்தாளர்களின்  700க்கு  மேற்பட்ட  நூல்களும்   அங்கு  இருக்கின்றன  என ரம்மியா  கூறினார்

இப்படி  அதிகளவு  இறுவட்டுகள் கொண்ட  நூல் நிலையம்  இலங்கையில்  எங்கும் இல்லையென  நினைக்கிறேன்

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்பு ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.

அவர்கள் செயல்  திட்டங்கள்   அவர்களின் அதீத  ஆசையை  பெரும்  கனவுகளைக் காட்டின. பல  வகைகளில்  இது  எனக்கு  ஓர்  முக்கிய செயற்பாடக   முன்னெடுப்பாக   எனக்குப்பட்டது

  அவையாவன

1.  மட்டக்களப்பிலே  ஒரு சிறு கிராமத்தில்  பிறந்த  பாலு மகேந்திராவுக்கு,  வன்னியில் கிளிநொச்சி  எனும்   கிராம நகரத்தில்  ஓர் நினைவாலயமும்  நூல் நிலையமும்  அமைக்கப்படுவது 

 முக்கியமாக இக்காலகட்டச் சூழலில்   வரவேற்கப்பட  வேண்டிய  மிகவும் ஓர் முக்கிய    அம்சம்

2. இதனை ஒழுங்கு செய்பவர்கள்  பல்கலைக்கழகத்தில்  ஊடக வியல்  . திரைப்பட  அறிமுகம்   பயின்று  வெளியேறிவர்கள்  அதிலும் மிகவும் இளம் தலை  முறையினர்   அதிலும் முக்கியமாகப்  பெண்கள்

3. இந்த  ஆரம்பவிழாவுக்கு  அவர்கள்  ஈரானிய திரைப்பட நெறியாளர்  மஜீத்  மஜீதி ,   சிங்கள திரைப்பட நெறியாளர் பிரசன்ன விதான,  தமிழ்   திரைப்பட பட  நெறியாளர்  பாரதிராஜா  போன்றோரையும்

4.  உள்நாட்டின்  திரைப்படத் துறையில் ஈடுபடும்  ஞானதாஸ், சோமீதரன்  விரிவுரையாளார்  கலாநிதி  ரகுராம்   போன்றோரையும்

  அப்துல் ஹமீட்,   தாஸீசியஸ், தம்பிஐயா தேவதாஸ்  போன்றோரையும்

 இன்னும் சிலரையும்  சிறப்பு   விருந்தினர்களாக  அழைத்தும் இருந்தனர். இது   அவர்களின்   இன மொழி  நாடு  கடந்த  மிகப் பரந்த  மனப்பான்மைக்கு  அடையாளம்

5.     நேற்று   இணைய  கருத்தரங்கில்   இணைய  வந்திருந்தோரிடையே 

80  வயதை  அண்மிக்கும்  முது  வயதுக்  கலைஞர்களும்,

50 வயதினரான   நடுவயதுக் கலைஞர்களும்

 20  வயதினரான  இளவயதுக்  கலைஞர்களும்  காணப்பட்டனர்.

 இந்த   தலைமுறை  சங்கமம்   இக்காலகட்டத்தில்  மிக மிக முக்கியமானது.

 முது  வயதினரிடமிருந்தும் நடு வயதினரிடமிருந்தும்   அனுபவங்களை  பகிர்ந்து கொண்டு    இதனை  ஒழுங்கு  செய்த  இளம்  தலை  முறையினர்  மேலே  பயணம் செய்ய  ஆயத்தமாக  இருந்தனர்  என்பதனை    இக்     காலசங்கமம்  காட்டியது

இவையாவற்றையும் கூறி  பாலு மகேந்திராவின்  இளவயது  அனுபவங்களும்,  பாலிய  வயது  அனுபவங்களும்  எவ்வாறு  அவர் படங்களில்  வெளிப்பட்டது என  ஓரிரு  உதரணம் காட்டினேன்

,

 கலைஞனை  என்றும் இயக்குவது  அவனது   இந்த ஆழ்மன  அனுபவங்களே

பாலு மகேந்திராவின் தந்தையார்    பாலநாதன்  ஒர்   கல்   வீடு  கட்ட எடுத்த  சிரமம்  துயரம்  துன்பம்    அலைச்சல்  என்பன    இளம் பாலு  மகேந்திராவின்  அடி மனதில் ஆழப்பதிந்த  ஒன்று

 அந்த  ஆழ்மன  அனுபவமே  அவரது   வீடு திரைப்படமானது

எமது இருவரின் ஊரான அமிர்தகளி  அங்கிருக்கும்  மாமாங்கப்  பிள்ளையார்  ஆலயம்  அதனது குளம்  என்பன  பிரசித்தமானவை

அந்த  மாமாங்கபிள்ளையார்  மாமாங்கக் குளத்தில்  ஒருவர் மூழ்கி இறந்து விட்டார்,,அவரது  உடல் வெளியே  கிடத்தப்பட்டு  இருந்தது 

அதனை  பார்க்க  ஊரே  கூடியது  மகேந்திர  அண்ணரும் அதனை  காண ஓடோடி  வந்தார்   அந்த  உடலும் சூழலும்   ஊரின் அழுகையும்   அவர்  மனதில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தின. அவ்வுடலை  அவரும் நானும் சென்று அருகே  இருந்து பார்த்தோம்  அந்த சோகம் எம்மைக்  கௌவியது

“எத்தனை  கனவுகளுடன் இவர்  இருந்திருப்பார்

 என  அவர்  கவலையுடன் கேட்டமையும்  ஞாபகம்  வருகிறது’

 அந்த  அனுபவமும்   மகேந்திர  அண்ணரின் பாடசாலைப்  பருவச் சேட்டைகளும்   அழியாத கோலம் எனும்  திரைப்படத்தில்   அழகாக  வெளிப்பட்டது   அவரது இளம் வாழ்வில்    அவரது வாலிப   வாழ்வில்  குறுக்கிட்ட  பெண்கள்  அதன்  காரணமாக  எழுந்த  ஆண் பெண்  உறவுகள் –  முரண்  பாடுகள்  என்பன  அவரது  பல படங்களில் வெளிப்பட்டன

அவற்றை  அவரது படங்களோடு  இணைத்துப் பார்ப்பது  அவரைப்  புரிந்துகொள்ள உதவும்

அவர் மிக மென்மையானவ்ர்  மெல்லுணர்வுகள் கொண்டவர்  நேர்மையானவர் தன்னை எப்போதும்  விமர்சித்துகொண்டு  வாழ்ந்தவர்

சந்தியா  ராகத்தில்  சொக்கலிங்க  பாகவதரை  வாகன நெருக்கடி சூழலில்  நடக்கவைத்து  வருத்தியதையும் அதனால்  தன் மனம்   மிக  வருந்தியதையும்  அவர்  கூறியுள்ளார்

தன்னையே  விமர்சிக்கும்  குணம்  அது

அவர் ஓர் இலக்கிய  ஆர்வலர்,

 சிறுகதை  ஆசிரியர்,

இலக்கியப்பத்திரிகை  ஆசிரியர்,

கவிஞர்

,திரைப்பட  எழுத்தாளர்

 படப்பிடிப்பாளார்

  சிறந்த  வாசகர்.

சிந்தனையாளர் 

என பல திறன்கள் கொண்டவர்

 இப்பல் திறன் ஆற்றலே அவரை அவர் துறையில்  பலரும் வியக்கும்  மனிதராக்கியது

தனது  வேகத்திற்கு  இலங்கையில் இடம் இல்லை  எனவும்  திரைப்படத் துறையில் அதிகம் அறிய வேண்டும்  எனவும் எண்ணிய அவர்  இலங்கை விட்டகன்றார்,

வெளி நாட்டில்பட்டம் பெற்றார், பூனா திரைபடக்  கல்லூரியில் முறையாக திரைப்படம் பயின்றார்  அத் துறையில்  தொழிநுட்பத்  தேர்ச்சி  பெற்ற  பின்னரேயே  அத் துறையில் இறங்கினார்

இந்த   திறமைகள்,  அர்ப்பணிப்பு   ,தேடல்,  ஈடுபாடு  அவரிடமிருந்து  இன்று சினிமா செய்யப் புறப்படும் இளம்தலைமுறை  கற்க வேண்டியவை

அவர் ஒரு ஒளிப்பதிவாளராக  அறிமுகமாகிய படம்    ஒரு மலையாளப்படம்  அதனை செய்தவர் செம்மீன் புகழ்  ராமுகரியத்.

 அவரின் நெல்லு எனும் படம்   வெளி வந்தது  1972 ஆம் ஆண்டில்  அப்போது  பாலு  மகேந்திராவுக்கு   வயது 31

அவருக்கு   தெலுங்கு  சங்கராபரணம் பெரும் புகழ் தந்தது

அவர் முதல் ஒளிப்பதிவு    செய்த  முதல்  தமிழ்ப் படம்

முள்ளும் மலரும் . அதில் நாயகன்  ரஜனிகாந்த்  அதன்  காட்சிகள் அனைவரையும்  கவர்ந்தன,

இயற்கை  ஒளியையே   அதில்  அவர் அதிகம்  பாவித்தார். இயற்கையை  விட   வேறு என்ன  ஒளி  இருக்கிறது  என்பார் 

 இது வந்தது 1977 இல் அப்போது  பாலு மகேந்திராவுக்கு வயது 38

அவரது    அழியாத  கோலங்கள் திரைப்படம் 1978  இல் வருகிறதுஅப்போது  பாலு மகேந்திராவுக்கு  வயது  39

அவரது  முதிர் சிந்தனைகளை பிரதிபலிக்கும்

வீடு  ( 1988)

சந்தியா  ராகம்   ( 1990)

  போன்ற  படங்கள்  பின்னால்  வருகின்றன

 தன் காலத்துக்குள்  பல மாற்றங்களைக்  கண்டவர்  அவர்  

தமிழர் சமூக அமைப்பில்அரசியலில்  போராட்டங்களில் பொருளாதாரம் மாறியதில்   தொழில் நுட்ப  முன்னேற்றத்தில் எல்லாம் தீவிர  மாற்றங்களைக்கண்டார்அவற்றைப்  புரிந்து  கொண்டார்  உள் வாங்கிக்  கொண்டார்இவற்றையெல்லம் உள்வாங்கி  வளர்ந்த  அவர் கடைசியாக  நடித்த  படம்

தலைமுறைகள்

தாத்தா  பேரன்  உறவுக்  கதை அது

அழியாத கோலங்களில்  விடலை  பெடியனாக  உலகை பார்த்த  அவர்  தலைமுறைகளில்  70  வயது  கடந்த தாத்தாவாக  உலகைப்பார்க்கிறார்

இப்பார்வைகளை  அவருக்கு  அவரது உலக அனுபவமும்  நூல் வாசிப்பும்  அளித்துள்ளனஆரம்பத்தில்  இலங்கைச்  சினிமா உலகும்  பின்னர்  தென்னிந்திய திரைப்பட உலகும்  கவனிக்காது  விடப்பட்ட  இவரே பின்னால் கொண்டாடவும்  பட்டார்

  அத்தோடு  திரைப்படத் துறையில்

4  தேசிய  விருதும்   3 மாநில விருதும் 2 பிலிம் பேர்  விருதும்2 நந்தி விருதும்

பெற்றார்

அவர் ஓர் தலை முறையையும்  உருவாக்கியுள்ளார்

   இயக்குனர்  பாலா

 ஓளிப்பதிவாளர்  சந்தோஸ் சிவன்  வெற்றி  மாறன்  ஆகியோர்  அவர்களுள் முக்கியமானவர்கள்

அதன் பின்னால்   அவரின் வழியில் இன்று பலர் உருவாகியுள்ளார்கள்

மகேந்திர  அண்ணரை  நான் நீண்ட  நாட்களுக்குபிறகு  1998 இல்   சென்னையில்    சந்திக்கிறேன்மிக மிக நீண்ட  நாட்களின்  பின்  ஏறத்தாள 35  வருடங்களின்  பின்

அது ஓர் அற்புதமான உணர்ச்சிகரமான  சந்திப்பு சில நிமிட நேரம்   அவரது  அணைப்புள்  நான் உட்பட்டேன்.பழைய  நினைவுகளை  மீட்டினோம் 

ஊரின் ஓவ்வொரு இடத்தையும் கேட்டார் ஊரின் புற்கள்  இலைகள்  நதிகள்   மரங்களை  நுணுக்கம்  நுணுக்கமாகக்    கேட்டார்இந்தப்  பின்னணியில் அவரது பழைய  நண்பர்களை அவர்களின்  இன்றைய  வாழ் நிலைமைகளை இன்னும்   நுணுக்கம் நுணுக்குமாக  வினவினார்

மிகத் தேர்ந்த   அனுபவம் மிக்க  கமராக் கண்ணின்   கேள்விகள்    அவை

அவர்  எல்லாவற்றையும்  அந்த கமராக்  கண் கொண்டே  பார்த்தார்

அவரது  படங்களில்  இயற்கையும்  மனித  உணர்வுகளும் இடம் பெறுவதன்  காரணம் எனக்கு  நன்கு புரியலாயிற்று

அவரிடமிருந்து  இளம் தலைமுறை கற்க வேண்டியவை  இவை

1.  சுய  கற்றல்  ( இது அவரது   5 வயது தொடக்கம் 15 வரை  நடந்தது)

2. தேடிக்கற்றல் ( இது  அவரது 20  வயது தொடக்கம் 25  வரை நடந்தது)

3. முறையாகக் கற்றல்  ( இது அவரது  25  வயது தொடக்கம் 30 வரை  நடந்தது)

4. தனது    வாழ்வனுபவங்களைபடமாக்குதல்  (  இது அவரது  30 வயது   தொடக்கம்   60  வயது வரை  நடந்தது

5. வாழ்வனுபவம்,  அறிவு மூலம்  ஓர் ஞானியாக  பரிணமித்தல்(  இது அவரது  70  வயதுக்குபிறகு நடந்தது)

ஒரு கலையில்  ஈடுபடும் ஓர் கலைஞனின்  அதி உயர்  நிலை அதுவாகவே  மாறி

 ஒர் பற்றற்ற நிலை  எய்துதல்   என்பர்  அறிஞர்

பாலு  மகேந்திரா  அண்ணரை  நினைக்கையில்  இவ்வாக்கியமே   ஞாபகம்  வருகிறது

வாழும் வரை  கற்க வேண்டும்  என்ற  படிப்பினை  அவரிடமிருந்து  இத்தலைமுறை  கற்றுக்கொள்ள வேண்டும்

படிப்பு, கற்றல் என்பன  இந்த இளம்  தலை முறை  வைத்திருக்கும்   வெற்றுப்  பானையை   மிகவும்  நிறைக்கும்  அதாவது    அவர்கள்    சட்டி நிறையும் 

சட்டியிலிருந்தால்தானே  அகப்பையில்  வரும்   என்பது  பழமொழி

இளம்  தலை முறைஅதி உயர்  தொழிநுட்பம்   எனும்  தங்க  அகப்பை  வைத்திருந்தாலும்

 தங்க  சட்டி வைத்திருந்தாலும் சட்டியில் எதுவும் இல்லாது விடின்  எதனைப்  பரிமாறுவார்கள்?

நிறைந்த  பல் துறை வாசிப்பாலும்  சிந்தனையாலும்  வாழ்பனுவங்களாலும் 

விமர்சன  சிந்தனையாலும் இளம்  தலைமுறை ஆர்வலர்களின்  சட்டி  நிறைவதாக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More