Home இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

by admin

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில்,  நல்லூர் நல்லை ஆதினத்தின் முன்பாக இடம்பெற்றிருந்தது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க,
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு,
தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை,
எமது உறவுகளை சிறையில் மடியவிட வேண்டாம். போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #தமிழ்_அரசியல்கைதிகளின் #விடுதலை #கவனயீர்ப்பு_போராட்டம் #வடக்கு_கிழக்கு #சிவில்அமைப்புக்கள்

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More