Home இலங்கை உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலை…

உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலை…

by admin

உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாகவும் , இதொரு ஏற்றுக்கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் எனவும் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாகவும் , இதொரு ஏற்றுக்கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் எனவும் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்றைய தினம் இரவு இடித்தழிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்கால் நினைவு தூபி இரவோடு இரவாக திருட்டுத்தனமாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமானது இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கை தீவில் தமிழ் மக்கள் உயிர் இழந்த தமது உறவுகளைக்கூட நினைவு கூற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்றுக்கெள்ளப்பட முடியாத அடிப்படை உரிமை மீறல் ஆகும். என தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More