
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனா்.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபடுமாறு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ல மணி நேரம் நடைபெற்ற கடுமையான விவாதங்களுக்குப் பின்னா் இந்த கண்டனத் தீர்மானம நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் தேசிய பாதுகாப்புத் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ள நிலையில், அவருக்கெதிரான குற்றச்சாட்டு தொடா்பில் செனட் அவையில் விசாரணை நடைபெறும். அங்கே அந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால் மீண்டும் அவர் ஜனாதிபதிபதவிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படும்.
எனினும் ஜனவரி 20ம் திகதி அவரதுபதவிக்காலம் முடிவதற்கு முன்பாக மீண்டும் செனட் கூடாது என்பதனால் அவர் பதவி நீக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது #அமெரிக்க_ஜனாதிபதி #டொனால்ட்_டிரம்ப் #கண்டனத்_தீர்மானம் #வன்முறை
Add Comment