Home உலகம் பலத்த அனா்த்தங்களை எதிா்கொண்ட இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது

பலத்த அனா்த்தங்களை எதிா்கொண்ட இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது

by admin

இந்தோனேசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறதென தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலேயே அதிக அளவில் மக்கள் இந்தத் தீவிலேயே வாழும் நிலையில் இதுவரை மக்களை வெளியேறுமாறு எவ்வித ஆணைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்பதுடன் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக தொிவிக்கப்படவில்லை. .

செமெரு மலைச் சரிவில் வாழும் கிராம மக்கள் இந்த வெடிப்பு குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் எச்சரித்துள்ளனா்.

எரிமலை வெடிப்பு தொடர்பன காணொளியில், 3,676 மீட்டர் உயரம் கொண்ட எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல் பல வீடுகளின் மேல் இருப்பதைக் காட்டுகிறது.

கடந்த சில வாரங்களில் இந்தோனேசியா பல நிலச் சரிவுகள், சுலாவசித் தீவில் பலமான நிலநடுக்கம், ஸ்ரீவிஜயா விமான விபத்து என பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #இந்தோனேசியா #செமெருமலை #எரிமலை #விமான_விபத்து #நிலநடுக்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More