Home உலகம் பாரிஸில் “பறக்கும் றக்சி” சேவை, பரீட்சார்த்த பறப்பு ஜூனில்!

பாரிஸில் “பறக்கும் றக்சி” சேவை, பரீட்சார்த்த பறப்பு ஜூனில்!

by admin


பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு ‘பறக்கும் றக்சிகள்’ (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு மேலே சேவையில் ஈடுபடவுள்ள பறக்கும் டாக்சிகளின் முதலாவது பரீட்சார்த்த ஓட்டம் வரும் ஜூன் மாதம் பொந்துவாஸில் உள்ள ஓடு தளத்தில் (Pontoise aerodrome) நடத்தப்படவுள்ளது.


பறக்கும் டாக்சி சேவையை நடத்துவதற்கான றக்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவற்றைத் தயாரிக்கின்ற 30 வெளிநாட்டு நிறுவனங்களை பாரிஸ் நகர போக்குவரத்து சேவையினர் தெரிவு செய்துள்ளனர்.இந் நிறுவனங்களில் ஒன்றுக்கே பாரிஸ் நகர றக்சி சேவையை நடத்தும் வாய்ப்புக் கிட்டும். இந்த நிறுவனங்களில் முதலாவதாக ஜேர்மனியின் ‘வெலோகொப்ரர்’
(Volocopter) நிறுவனத்தின் றக்சிகளே எதிர்வரும் ஜூன் மாதம் பரீட்சார்த்தப் பறப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


பயணப் பொதிகளுடன் இரண்டு பயணிகள், ஒரு விமானி என மூவர் செல்லக் கூடிய அந்த றக்சிகள் மணிக்கு 110 கிலோ மீற்றர்கள் வேகத்தில், 400-500 மீற்றர்கள் உயரத்தில் பறக்கக் கூடியவை.
ஹெலிக்கொப்ரர், ட்ரோன் இரண்டினதும் தொழில்நுட்பங்களை இணைத்து தயாரிக்கப்படுகின்ற இந்த சிறிய வானூர்திகளை பாரிஸ் விமான நிலையங்களின் குழுமமும், RATP போக்குவரத்து சேவை நிறுவனமும் இணைந்து சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளன.

2024 இல் பாரிஸில் நடைபெறவிருக் கின்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் போது பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் டிஸ்னி லான்ட் போன்ற உல்லாச இடங்களுக்கு பறக்கும் றக்சி சேவைகளை நடத்தப்போவதாக பிரான்ஸின் ‘எயார் பஸ்’ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருப்பது தெரிந்ததே.

குமாரதாஸன். பாரிஸ்.
18-01-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More