Home உலகம் முறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன

முறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன

by admin

முறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் காரணமாக, பேரழிவு தரக்கூடிய நிலையொன்றுக்கு உலகம் முகம்கொடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வறிய நாடுகளில் உள்ள கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தரப்பினர் தடுப்புமருந்தை பெற்றுக்கொள்ளாத போது, செல்வந்த நாடுகளிலுள்ள இளையவர்கள் அதனை முதலில் பெற்றுக்கொள்வது நியாயமற்றது என ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்ராஸ் அதானம் கேபிாியேசஸ் தெரிவித்துள்ளார்.

49 செல்வந்த நாடுகளில், 39 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான தடுப்புமருந்துகள் விநியோகப்பட்டுள்ள நிலையில், வறிய நாடொன்றில் 25 தடுப்புமருந்துகளே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தமது நாட்டில் கொரோனா தடுப்புமருந்தை உருவாக்கியுள்ளதுடன் அமெரிக்க – ஜெர்மனி இணைந்து தயாரித்த பைசா் தடுப்புமருந்து போல, பன்னாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்புமருந்துகளும் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான நாடுகள், தமது பிரஜைகளுக்கு தடுப்புமருந்தை வழங்குவதற்கே முன்னுரிமையளிக்கின்றன என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை, கொரோனாவிற்கான பதில் நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

சர்வதேச அவசரகால நிலையை, உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே பிரகடனம் செய்திருக்க வேண்டுமென தொிவித்துள்ள ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழு பொது சுகாதார நடவடிக்கைகளை சீனா விரைவாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது. #முறையற்ற #கொரோனா_தடுப்புமருந்து #பேரழிவு #உலகசுகாதாரஅமைப்பு #WHO

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More