உலகம் பிரதான செய்திகள்

சாம்சங் துணைத் தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் குன் ஹைக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2017-ல் கைது செய்யப்பட்டஅவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மேல்முறையீடு செய்ததன் மூலம் அவருடைய தண்டனை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் வழக்கை உச்ச நீதிமன்றம் சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியதனையடுத்து நேற்றையதினம் சியோல் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.

தென் கொரிய சட்டப்படி 3 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனைகள் மட்டுமே ரத்து செய்யப்படவோ குறைக் கப்படவோ வாய்ப்புள்ளது. அதற்கு அதிகமாக இருந்தால் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்பதனால் லீக்கு மீண்டும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓராண்டு சிறையில் இருந்ததால் இரண்டரை ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபரில் நிறுவனத் தலைவரும் லீயின் தந்தையுமான லீ குன் ஹீ காலமான நிலையில் அவருடைய பொறுப்புகளைக் கைப்பற்ற இருந்த நிலையில் இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #சாம்சங்_துணைத்தலைவருக்கு #லஞ்சம் #சிறைத்தண்டனை #தென்கொரிய

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.