Home இலங்கை பேருந்து – கார் விபத்து

பேருந்து – கார் விபத்து

by admin

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு, கோண்டாவில் சாலைக்கு(டிப்போ) செல்லும்போது யாழ்ப்பாணம் -ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில் பயணித்தவர்களில்  ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. 


இச்சம்பவம் நேற்று (21) இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 பேருந்து வந்தவேகத்தில் காரினை மோதியதுடன் வீதியோர தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம், பேருந்து தரிப்பு நிலையம் , அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதி என்பவற்றை உடைத்து கொண்டு சென்று  மோதி நின்றது. 


அதன்போது ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் ஒருவர் தலையில் கடும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
மேலும் ஆடைகள் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன சுத்திகரிப்பு (சேவிர்ஸ்) நிலையத்தின் ஒருபகுதியும் சேதமடைந்ததுடன் அங்கு நின்ற கார் ஒன்று சிறு சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளது.


மோதிய போக்குவரத்து சபை பேருந்தின் முகப்பு பகுதி கடுமையாக சேதடைந்துள்ளதுடன் ஆசனங்களுடன் உடைந்துள்ளன.
பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் தனியார் நிறுவனம்  பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணத்துக்கு அலுவலக விடயமாக  வந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். #பேருந்து #கார் #விபத்து #யாழ்ப்பாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More