Home இலங்கை வீதிகளில் கழிவுகளை வீச முற்பட்டவர்கள் மடக்கி பிடிப்பு

வீதிகளில் கழிவுகளை வீச முற்பட்டவர்கள் மடக்கி பிடிப்பு

by admin

வீதிகளில் வீசும் நோக்குடன் திண்ம கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


யாழ்.நகரை அண்டிய காக்கை தீவு பகுதியில் உள்ள திண்ம கழிவகற்றும் வளாகத்தை சூழ உள்ள பகுதிகளில் இரவு வேளைகளில் வாகனங்களில் கழிவுகளை எடுத்து வந்து வீதியோரமாக பலர் வீசி செல்கின்றனர். 


அதனால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்வதுடன் , அவ்வீதி வழியாக செல்வோரும் பெரும் இடர்களை சந்தித்து வருகின்றனர். 


இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரவர்கள் இரவு வேளைகளில் கழிவுகளை வீசி செல்பவர்களை மடக்கி பிடிக்க ஒன்று கூடி காத்திருந்தனர். 


அவ்வேளை படி ரக வாகனத்தில் கழிவுகளை ஏற்றி வந்த இருவர் அப்பகுதியில் கழிவுகளை வீசிய போது பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்தனர். 


அது தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளருக்கு பொதுமக்கள் அறிவித்தமையை தொடர்ந்து , அவ்விடத்திற்கு சென்ற  தவிசாளர் , உறுப்பினர்கள் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்து கழிவுகளை கொண்ட வந்தவர்களையும் வாகனத்தையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 


அதனை அடுத்து வாகனத்தையும் , அதில் வந்த இருவரையும் காவல்நிலையம் கொண்டு சென்ற காவல்துறையினர் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். #வீதிகளில் #திண்மகழிவுகளை #காக்கைதீவு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More