Home இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.

by admin

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என மிக நம்பகமான முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படுவதுடன் அவர்களின் சொத்துக்களும் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட் தெரிவித்துள்ளார்  

அவா் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இவ்வாறு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மேலும் இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைப் பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் அவா் பரிந்துரை செய்துள்ளார்.

அதேவேளை ஆதாரங்கள் எவையும் நிரூபிக்கப்படாதவர்களுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.


குறித்த அறிக்கையில் அவசியமற்ற சில விடயங்கள் காணப்படுவதாக தாங்கள் கருதுவதாகவும் தங்களுக்கு அவதூறு கற்பிக்க முனையும் நாடுகள் சிலவற்றை விட இலங்கையர்களான நாங்கள் அமைதியாகவும் ஸ்திரதன்மை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றோம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.


முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது எனவும் இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள ஜயனத் கொலம்பகே, அரசாங்கம் தனது நிலைப்பாட்டை விரைவில் பகிரங்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். #மனிதஉரிமைமீறல்கள் #பயணத்தடை #சொத்துக்கள் #ஐக்கியநாடுகள் #மிச்செல்_பச்செலெட்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More