Home இலங்கை பெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்

பெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்

by admin

கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  மாலை அறுத்துச் சென்ற இளைஞன்,
அதனை விற்றுவிட்டு சுமார் 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலான இரண்டு அலைபேசிகளை வாங்கியுள்ளார் என காவல்துறையினா் தெரிவித்தனர்.

கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் வயோதிப் பெண்ணும் அவரது மகளும் நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளிலில் பயணித்துள்ளனர். அதன் போது  அவர்களை பின்தொடர்ந்த ஒருவர் தாயாரின் கழுத்திலிருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்தெடுத்துக் கொண்டு தப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டது.  முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறைப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தார். 

சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள சிசிரிவி பதிவின் அடிப்படையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். அதன் அடிப்படையில் , கொக்குவிலைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  கைது செய்யப்பட்டார். அவரது உடமையில் இருந்து 75 ஆயிரம் ரூபாய்
 மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு  அதிதிறன் அலைபேசிகள், 90 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன.

சங்கிலியை விற்பனை செய்து அலைபேசிகள் இரண்டையும் சந்தேக நபர் வாங்கியுள்ளார் எனவும் ,அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.  #பெண்ணிடம் #சங்கிலி #அலைபேசிகள் #இளைஞர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More