இலங்கை பிரதான செய்திகள்

MR ஐ நீக்கி GRஐ இருத்த வேண்டும் – விமலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது…

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது.

அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாகவே தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர விமல் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

விமல் வீரவங்ச மன்னிப்புக்கோர வேண்டும் – பொதுஜன பெரமுன!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, தெரிவித்த கருத்து தொடர்பாக மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (08.02.21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பொதுஜன பெரமுன தொடர்பாக எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் உரிமை விமல் வீரவங்சவிற்கு இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணியில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.