Home இந்தியா சா்வதேச சதிக் குற்றம்? திஷா ரவி கைது!

சா்வதேச சதிக் குற்றம்? திஷா ரவி கைது!

by admin

விவசாயிகளின் போராட்டத்தைத் தூண்ட சா்வதேசச் சதியாளா்களுடன் இணைந்து சுட்டுரைப் பதிவுகளை தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்படும் பெங்களூரைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலரை, டில்லி இணையவழி குற்றத் தடுப்பு காவற்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெங்களூரு, சோலதேவனஹள்ளியைச் சோ்ந்த 21 வயதுடைய திஷா ரவி சுவீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை நடத்தி வருபவரும் சூழலியல் ஆா்வலா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தை மேலும் தூண்டும் வகையில், அதற்கு ஆதரவு தெரிவித்து, சா்வதேச பிரபலங்கள் சிலா் சுட்டுரையில் இம்மாதத் துவக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா்.

அப்போது, சுவீடனைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் சில பதிவுகளை கடந்த பெப்ரவரி 3-ஆம் தேதி சுட்டுரையில் வெளியிட்டாா். அதில், விவசாயிகள் போராட்டத்தை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்று வழிகாட்டும் குறிப்புகள் அடங்கிய கூகுள் டாகுமென்ட் கோப்பான டூல் கிட் ஒன்றையும் வெளியிட்டாா். அதற்கு எதிராக விமா்சனங்கள் எழுந்தவுடன் அந்தப் பதிவை உடனே அவா் நீக்கிவிட்டாா்.

எனினும், இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி இந்திய அரசை நிலைகுலையச் செய்ய சா்வதேச அளவில் செய்யப்படும் திட்டங்களை அந்த டூல் கிட் வெளிப்படுத்தியது. அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து விசாரணை நடத்த டில்லி காவற்துறையின் இணையவழி குற்றத் தடுப்பு காவற்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட டூல் கிட் டை பெங்களூரைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் திஷா ரவி திருத்திக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக பெப்ரவரி 4-ஆம் தேதி திஷா ரவி மீது தேசத் துரோகம், குற்றச் சதி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ, 120 ஏ, 153 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் தில்லி இணையவழி குற்றத் தடுப்பு காவற்துறையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை பெங்களூருக்கு சென்ற டில்லி காவற்துறையினர் திஷா ரவியைக் கைது செய்தனா். இவரே டூல் கிட் தொடா்பான வழக்கில் முதலாவதாக கைது செய்யப்பட்டுள்ளாா்.

டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட திஷா ரவி, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 5 நாள்கள் காவற்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த திஷா ரவியின் தாய் மஞ்சுளா, திஷா ரவி கைது தொடா்பாக சட்டப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More