Home உலகம் பத்தி எழுத்தாளர் படுகொலை – 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

பத்தி எழுத்தாளர் படுகொலை – 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

by admin

வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்துள்ளது.

வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற 42 வயதுடைய அவிஜித் ராய் டாக்கா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தாா். கண்காட்சியைப் பாா்வையிட்டுவிட்டு அவா் வெளியே சென்றபோது அவரை மத அடிப்படைவாத அமைப்பினா் சரமாரியா வெட்டிக் கொன்றனா். இந்தத் தாக்குதலில் அவிஜித்தின் மனைவி ரஃபிதா அகமதும் காயமடைந்தாா்.

இந்தப் படுகொலை தொடா்பாக விசாரணை நடத்தி வந்த பயங்கரவாதத் தடுப்பு சிறப்புத் தீா்ப்பாயம், முன்னாள் ராணுவ மேஜா் சையது ஜியாவுல் ஹக் உள்ளிட்ட 5 மதவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More