
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த உண்மை கருத்துகளை வெளியிடாத ஜனாதிபதி ஆணைக்குழு, ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ எனும் பரிந்துரைகளைக் கொண்டு, அரசியல் கட்சி கொள்கை அளவில், வெறும் ஆவணத்தை மாத்திரமே முன்வைத்துள்ளதாக, முன்னாள் பிரதமரும் ஐ.தே.கவின் தலைவரும் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முதலாவது தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே, பிரதமராகிய தான் பலவந்தமாகப் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று, பாதுகாப்புப் பிரதானியை அழைத்து, அடுத்தடுத்த தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்ததாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கணடவாறு தொிவித்துள்ளாா்.
மேலும் அங்கு கருத்துரைத்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற தினம் , பாதுகாப்புப் பிரிவுகளைக் கொண்டு, அதன் பின்னர் தாக்குதல் இடம்பெறாத வகையில் தடுக்க தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் எவையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை எனவும் தொிவித்துள்ளாா்.
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்பதை அமுல்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இரத்துச் செய்ய, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்கின்றதா எனக் கேள்வி எழுப்பிய ரணில் விக்கிரமசிங்க , நிலங்களை இனங்களுக்குப் பிரிப்பதன் மூலம் இந்நாடு எதிர்கொள்ளும் விளைவுகள் என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேலும், சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் ஏப்ரல் 09 ஆம் திகதி, பாதுகாப்பு சபை கூடியபோது, தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கிடைக்கப்பெற்ற எந்தவொரு தகவல் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இராணுவ பிரதானி, குற்ற விசாரணை திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சகலரும் அக்கூட்டத்தில் வெளியிடாத விடங்களை, அதன் பின்னர் கலந்துரையாடினரா என்பதைக் கூற முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், புதிதாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை எனவும் மேலைத்தேய சட்டத்தை நீக்க, ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைக்கிறது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளா்ா.
பாதுகாப்புச் சபை கூடியபோது, தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்களை அழைத்து ஏதேனும் தாக்குதல் சம்பவம் இடம்பெறுமாயின், அதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்கவேண்டும் எனக் தொிவிக்க முடியும் எனவும் அவா் தொிவித்துள்ளாா். #உயிர்த்தஞாயிறுத்தாக்குதல் #ஜனாதிபதிஆணைக்குழு #ரணில்விக்கிரமசிங்க #நிலங்களை
Add Comment